/* */

நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து சோகம்

தேனி மாவட்டத்தில், இரு வேறு சம்பவங்களில் மூன்று மணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.

HIGHLIGHTS

நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து சோகம்
X

பலியான சிறுவர்கள். 

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ், 14, கவுதம், 14. இவர்கள் இருவரும் இங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். இன்று மாலை வேப்பம்பட்டியில், செயல்படாத கல்குவாரியில் குளிக்க சென்றனர். அப்போது நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். சின்னமனுார் தீயணைப்பு மீட்பு படையினர், இருவரது உடலையும் மீட்டனர். சின்னமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அம்பத்துாரை சேர்ந்தவர் மகேஷ். இவர் தனது மனைவி பாரதி, மகன்கள் விஷால், கார்த்திக், ஆகியோருடன் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வந்திருந்தார். விஷால் சென்னையில் பிளஸ் 2 படித்து வந்தார். கார்த்திக் 9ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை குரங்கனி, வீரபாண்டிக்கு சென்று விட்டு, மாலை இவர்கள் போடி பெரியாத்து கோம்பை அருகே அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நால்வரும் நீர் சுழலில் சிக்கினர். இதில் விஷால் இறந்தார். மகேஷ், பாரதி, கார்த்திக் உயிர்தப்பினர். போடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Oct 2021 12:46 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்