/* */

தேனி மாவட்டத்தில் 1.05 லட்சம் ஏக்கரில் சாகுபடி: உரம் விநியோகத்தை கண்காணிக்க குழு

தேனி மாவட்டத்தில் அதிக மழை பொழிவால் விவசாய, தோட்டக்கலை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 1.05 லட்சம் ஏக்கரில் சாகுபடி: உரம் விநியோகத்தை கண்காணிக்க குழு
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் அதிகளவு பரப்பில் சாகுபடி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக நெல் 25 ஆயிரத்து 597.5 ஏக்கர் பரப்பிலும், சிறு தானியங்கள் 36 ஆயிரத்து 442.5 ஏக்கர் பரப்பிலும், பயறு வகைகள் 23 ஆயிரத்து 312.5 ஏக்கர் பரப்பிலும், எண்ணெய்வித்துக்கள் 6 ஆயிரத்து 840 ஏக்கர் பரப்பிலும், பருத்தி 6 ஆயிரத்து 705 ஏக்கர் பரப்பிலும், கரும்பு 6 ஆயிரத்து 495 ஏக்கர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 392.5 ஏக்கரில் சாகுபடி நடக்கிறது.

இதில் தோட்டக்கலை பயிர்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. இந்த கணக்கு வேளாண்மைத்துறை பயிர்கள் ஆகும். தோட்டக்கலை பயிர்களையும் சேர்த்தால் மொத்த சாகுபடி பரப்பு இன்னும் இரண்டு மடங்கு அதிகரிக்கும்.

இதனால் உரங்களின் தேவை கிடுகிடு வென அதிகரித்துள்ளது. ஆனால் உரங்களுக்கு பற்றாக்குறை இல்லை என வேளாண்மைத்துறை அதிகரித்தாலும், கடும் விலை உயர்வு, தேவை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக உரங்கள் விற்பனையில் பெரும் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.

இதுவரை முறைகேட்டில் ஈடுபட்ட 11 உரக்கடைகள் மூடப்பட்டுள்ளன. முறையான விவரங்கள் வெளியிடாத 21 கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரங்கள் சப்ளை, விற்பனையை கண்காணிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 25 Dec 2021 3:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!