/* */

ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்டு குளம்போல் மாறிய வைகை ஆறு

தேனி குன்னுார் வைகை ஆறு ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்டு குளம் போல் காட்சியளிக்கிறது.

HIGHLIGHTS

ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்டு  குளம்போல் மாறிய வைகை ஆறு
X

குன்னுார் வைகை ஆறு ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்டு காணப்படுகிறது.

வைகை ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் 9 மாதங்கள் தண்ணீர் வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வைகை அணையின் நீர் மட்டம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. அதுவும் கடந்த ஆண்டு தொடர்ச்சியாக பல மாதங்கள் அணையின் நீர்மட்டம் 69 அடி என்ற நிலையிலேயே இருந்தது.

தற்போது கூட அணையின் நீர்மட்டம் 67 அடியாகவே உள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள குன்னுார் வைகை ஆறு வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதாவது வைகை ஆற்றில் குன்னுார் கிராமம் வரை அணை தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல மாதங்களாக இப்படி தண்ணீர் தேங்கி நிற்பதால் குளத்தில் வளர்வது போல் ஆகாயதாமரை செடிகள் வளர்ந்து ஆறு முழுக்க மூடி உள்ளது. இதனால் பார்ப்பதற்கு ஏதோ நீண்ட குளம் போல் காணப்படுகிறது. வைகை ஆற்றில் இதற்கு முந்தைய காலங்களில் இப்படி ஆகாயத்தாமரை செடிகள் மூடி இருந்ததை தாங்கள் பார்க்கவில்லை என தேனி மக்கள் தெரிவித்தனர்.

Updated On: 1 Jun 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...