Begin typing your search above and press return to search.
தேனி மாவட்டத்தில் 34 ஆயிரத்து 399 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி
தேனி மாவட்டத்தில் நேற்று நடந்த 13வது மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 34 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
HIGHLIGHTS
தேனி மாவட்டத்தில் நேற்று 13வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 386 இடங்களில் நடந்தது.
இதில் முதல் தவணை தடுப்பூசி 17 ஆயிரத்து 766 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 16 ஆயிரத்து 633 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் 28 பேருக்கும் உட்பட மொத்தம் 34 ஆயிரத்து 399 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.