/* */

தேனியில் மீண்டும் கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அதிர்ச்சி

தேனி மாவட்டத்தில் மீண்டும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ, சுகாதாரத்துறைகள் அதிர்ச்சி அடைந்துள்ளது.

HIGHLIGHTS

தேனியில் மீண்டும் கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அதிர்ச்சி
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தவிர 60 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு விட்டனர். வெகுசிலர் மட்டுமே தடுப்பூசி போடவில்லை. தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் தேனி மாவட்டத்தில் கொரோனா மிகுந்த கட்டுப்பாடுகளுடன் தான் இருந்தது.

இரண்டாம் அலை முடிந்த பின்னர் தேனி மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ச்சியாக 125 நாட்களுக்கும் மேல் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 34 பேர் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது. இதில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தேனி மாவட்ட நிர்வாகமும், மருத்துவ, சுகாதாரத்துறைகளும் அதிர்ச்சியில் உள்ளன. தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Updated On: 19 Jun 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  3. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  5. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  6. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  7. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!