/* */

தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா தாெற்று உறுதி

தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா தாெற்று உறுதி
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை வெளுத்து வாங்கி விட்டது. தினசரி தொற்று ஆயிரத்தை எட்டியது. அதேபோல் இறப்புகளும் அதிகம் இருந்தன. மக்கள் மிரண்டு போய் இருந்தனர்.

இந்நிலையில் படிப்படியாக குறைந்து வந்த தொற்று நேற்று முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, தேனி மாவட்டத்தில் மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனியை ஒட்டி உள்ள கேரள மாநிலத்தில் பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில், தினமும் கேரளாவில் இருந்து பல ஆயிரம் பேர் தேனி மாவட்டம் வந்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் கட்டுபாட்டிற்குள் வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து விடக்கூடாதே என்ற கவலையில், மருத்துவ, சுகாதாரத்துறைகள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு கேரள எல்லையில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என மருத்துவக் கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 6 Aug 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்