கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு: போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு: போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
X

பைல் படம்.

கஞ்சா வியாபாரியுடன் தொடர்பில் இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

தேனி சக்கரைப்பட்டியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஈஸ்வரன், 39. அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில், போலீஸ்காரர்கள் ராஜா, வாலிராஜன், ஸ்ரீதர் ஆகியோர் கஞ்சா வியாபாரி ஈஸ்வரனிடம் ஒண்ணரை கிலோ கஞ்சா வாங்கி போலீஸ்காரர் ராஜாவின் வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர்.

இது குறித்து எழுந்த புகாரில் கூடுதல் எஸ்.பி., கார்த்திக் விசாரணை நடத்தி புகாரை உறுதி செய்தார். இதனை தொடர்ந்து வீட்டில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் ராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன், போலீஸ்காரர்கள் வாலிராஜன், ஸ்ரீதர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

Tags

Next Story
ai marketing future