நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் கூடலுார் விவசாயிகள் முறையீடு

நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் கூடலுார் விவசாயிகள் முறையீடு
X
கூடலுார் வந்த நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
கூடலுாரில் குடிநீர் திட்ட கட்டுமானப்பணிகளை பார்வையிட வந்த நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்டம், கூடலுார் முல்லைப்பெரியாற்றில் வண்ணான்துறையில் தடுப்பணை கட்டி அங்கிருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மாற்று வழிகள் மூலம் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பணை கட்டும் பணிகளை பார்வையிட, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, மதுரை மாநகராட்சி கமிஷனர், மதுரை மாநகராட்சி நிர்வாக பொறியாளர், பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கூடலுார் நகராட்சி அதிகாரிகள் இன்று வண்ணான்துறை வந்தனர். அங்கு இருந்த பாரதீய கிஷான் விவசாய சங்க தேனி மாவட்ட தலைவர் டாக்டர் சதீஷ்பாபு, கூடலுார் முல்லைச்சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன் உட்பட விவசாயிகள் அவர்களிடம் மனு கொடுத்தனர்.

மனுவில் இந்த திட்டத்தை தேனி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்படுத்த வேண்டும். இன்னும் 15 ஆண்டுகள் கழித்து ஏற்படும் தேவையினை கணக்கில் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் 15 ஆண்டுகள் கழித்து தேவை அதிகரிக்கும். இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியிருந்தனர்.

Tags

Next Story
ai based agriculture in india