/* */

பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

முல்லைபெரியாறு அணை நீர் கடந்த இரண்டு நாட்களாகவே 135.90 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
X

முல்லைப்பெரியாறு அணை.

முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அணை நீர் மட்டம் 136.30 அடியை எட்டினால் கேரளா வழியாக நீர் திறக்க வேண்டும். தமிழகம் வழியாக குறிப்பிட்ட அளவு மட்டுமே நீர் எடுக்க முடியும். ரூல்கர்வ் அமல்படுத்த தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்த நிலையில், மழை குறைய தொடங்கியது. இதனால் நீர் வரத்தும் குறைந்தது. இதனை தொடர்ந்து நீர் மட்டம் கடந்த இரண்டு நாட்களாகவே 135.90 அடி உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 1879 கனஅடி நீர் வருகிறது. வரும் நீர் முழுக்க தமிழகப்பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது.

இதற்கிடையில் பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையினை அமல்படுத்தக்கூடாது என இந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 July 2022 3:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...