பெரியகுளம் பகுதியில் கஞ்சா விற்கும் சிறுவர்கள் : அதிர்ச்சியில் காவல்துறை

X
By - Thenivasi,Reporter |3 Jun 2022 1:30 PM IST
தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை அறிந்த போலீஸ் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டியில் தேவதானப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த இரண்டு சிறுவர்களை கைது செய்தனர்.
அவர்கள் விற்பனைக்காக சிறிய அளவிலான கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தனர். இவருக்கும் வயது பதினேழுக்கும் குறைவு. அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா வியபாரிகளை கைது செய்து, அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதால், மாற்று ஏற்படாக இளம் சிறுவர்களை கஞ்சா விற்பனையில் கும்பல் ஈடுபடுத்துவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் தற்போது இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu