சின்னமனுார் முல்லை பெரியாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

X
பைல் படம்.
By - Thenivasi,Reporter |16 Jun 2022 12:29 PM IST
Today Theni News-சின்னமனுார் முல்லைப்பெரியாற்றில் மூழ்கி சிறுவன் பலியானார்.
Today Theni News- சின்னமனுார் முல்லைப்பெரியாற்றில் மூழ்கி சிறுவன் பலியானார்.
புதுச்சேரி கோரப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அரிபுத்ரன், 42. இவர் தேனி மாவட்டம், சீலையம்பட்டியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இவருடன் விழுப்புரம் பக்கிரிபாளையத்தை சேர்ந்த அய்யனார் மகன் சந்தோஷ், 18 உட்பட சில நண்பர்களும் வந்திருந்தனர். விசேஷம் முடிந்ததும், அரிபுத்ரன் உடன் வந்தவர்கள் அருகில் உள்ள முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத நீர்சூழலில் சிக்கி சந்தோஷ் இறந்தார். சின்னமனுார் தீயணைப்பு படையினர் சந்தோஷ் உடலை மீட்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu