/* */

எட்டுக்கு எட்டு அடியில் செயல்பட்டுவரும் போடி தோட்டக்கலை அலுவலகம்

முன்னாள் துணை முதல்வர் தொகுதியான போடியில் தோட்டக்கலை அலுவலகம் மிகவும் சிறிய அறையில் செயல்படுகிறது.

HIGHLIGHTS

எட்டுக்கு எட்டு அடியில் செயல்பட்டுவரும் போடி தோட்டக்கலை அலுவலகம்
X

போடியில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம்.

மூன்று முறை தமிழக முதல்வர், நான்கு ஆண்டுகாலம் துணை முதல்வர், 20 ஆண்டுகாலம் அமைச்சராக பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதி போடிநாயக்கனூர். இங்கு தோட்டக்கலை அலுவலகம் இன்னுமும் கட்டித்தரப்படவில்லை. மிகவும் சிறிய அறையில் அந்த அலுவலகம் செயல்படுவதால் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வருகின்றனர்.

தேனி மாவட்டத்திலேயே அதிகளவு தோட்டக்கலை நிலங்கள், மலைப்பயிர் நிலங்களை கொண்டது போடி சட்டசபை தொகுதி. மிகவும் வளமான தொகுதியாகவும் உள்ளது. இங்குள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒரு உதவி இயக்குனர், ஒரு துணை தோட்டக்கலை அலுவலர், மூன்று உதவி தோட்டக்கலை அலுவலர்கள், ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த அலுவலகம் எட்டு அடி நீளம், எட்டு அடி அகலம் கொண்ட மிகவும் சிறிய அலுவலகத்தில் பல ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு இரண்டு டேபிள்கள் மட்டுமே போட முடியும். ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரை ஒரு மூலையில் அமர வைத்துள்ளனர். ஆக ஒரே நேரத்தி்ல மூன்று பேர் மட்டுமே பணியாற்ற முடியும்.

மற்ற மூன்று பேர், அவர்கள் பணி முடித்து வெளியே வரும் வரை களப்பணி ஆற்ற வேண்டியது தான். வெளியே மரத்தடியில் ஒரு டேபிள் போட்டு இரண்டு பேர் அமர்ந்துள்ளனர்.மழை பெய்தால் அவர்கள் நிலைமை அதோகதிதான்.

ஆவணங்கள் வைக்க இடம் இல்லாமல், அங்கும், இங்குமாக குவித்து வைத்துள்ளனர். உரம், பூச்சி மருந்துகள், விதைகள், நாற்றுகள் என எதுவுமே வைக்க இடம் இல்லை. சார், இதெல்லாம் எங்க சார் வைப்பீங்க என கேட்ட போது, ''அந்த கொடுமைய ஏன் சார் கேக்குறீங்க. இங்க ஒரு பழைய அரண்மனை இருக்கு. அங்க அனுமதி வாங்கி அன்அபிசியலா வெச்சுக்கிட்டு இருந்தோம். இப்ப அந்த அரண்மனை ரொம்ப சேதமாகி எப்ப வேணாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் அங்கு வைக்கவில்லை. உரம் வந்தால் யாராவது தனியாரிடம் (தனியார் உரக்கிடங்கில் இடம் ஒதுக்கி) அனுமதி கேட்டு அங்கு வைத்து விவசாயிகளிடம் கொடுத்து வருகிறோம். இதுவே பெரிய பிரச்னையா இருக்கு சார்'' என தெரிவித்தனர்.

மூன்று முறை முதல்வராகவும், 20 ஆண்டுகள் அமைச்சராகவும், நான்கு ஆண்டுகள் துணை முதல்வராகவும் இருந்த உங்கள் தொகுதி எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்திடம் சொல்லவில்லையா என கேட்டோம். சார், கலெக்டர் மூலம் அவர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். பணம் ஒதுக்கி கொடுத்துட்டாரு. கட்டத்தான் இடம் கிடைக்கல. இப்ப இருக்க கலெக்டர் ஒரு வழியா தி.மு.க., அரசிடம் கேட்டு, இடம் வாங்கிட்டாரு, விரைவில் எங்களுக்கும், வேளாண்மைத்துறைக்கும் சேர்த்து ஒரு நல்ல விரிவான கட்டடம் கட்டப்போறாங்க சார். அதுவரைக்கும் சமாளிக்க வேண்டியது தான் சார் என்று பரிதாபமாக கூறினர்.

Updated On: 31 Aug 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....