/* */

அணைப்பிள்ளையார் அணையில் இருந்து மீனாட்சிபுரம் கண்மாய்க்கு நீர் திறப்பு

தேனி மாவட்டம், போடி அணைப்பிள்ளையார் அணையில் இருந்து மீனாட்சிபுரம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வறண்டு போனதால் மீன்கள் செத்து மிதந்த போடி மீனாட்சிபுரம் கண்மாய்க்கு கொட்டகுடி ஆற்றில் அணைப்பிள்ளையார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

போடி கொட்டகுடி ஆற்றின் குறுக்கே அணைப்பிள்ளையார் கோயில் அணை உள்ளது. இங்கிருந்து போடி மீனாட்சிபுரம் கண்மாய்க்கு நீர் செல்லும். ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் வறண்டதால், மீன்கள் செத்து மிதந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கொட்டகுடி ஆற்றில் அணைப்பிள்ளையார் கோயில் அணையில் இருந்து மீனாட்சிபுரம் கண்மாய்க்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். கொட்டகுடி ஆற்றில் குறைந்த நீர் வரத்து உள்ளதால், பொக்கலைன் மூலம் சிறு கால்வாய் போல் வெட்டி கண்மாய்க்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. ஓரிரு நாளில் கண்மாய் நீர்மட்டம் ஒரளவு திருப்தியான உயரத்தை எட்டி விடும். எனவே மீன்கள் இறப்பது தடுக்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 5 Oct 2021 10:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க