/* */

போடி பகுதியில் பலத்த மழை: அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப் பெருக்கு

இன்று காலை போடி, போடி மெட்டு, குரங்கனி, டாப்ஸ்டேஷன் பகுதியில் பலத்த மழை பெய்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

HIGHLIGHTS

போடி பகுதியில் பலத்த மழை:  அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப் பெருக்கு
X

போடி பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணைப்பிள்ளையார் அணையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

போடி பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைப்பிள்ளையார் அணையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை போடி, போடி மெட்டு, குரங்கனி, டாப்ஸ்டேஷன் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறு போடிக்குள் நுழையும் இடத்தில், அணைப்பிள்ளையார் அணையினை கடந்து செல்கிறது. இந்த அணையினை சுற்றுலாதலமாக மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், இன்று காலை பெரும் வெள்ளம் இப்பகுதிக்கு வந்தது. அணைப்பிள்ளையார் அணையில் நீர் நிரம்பி வெளியே அருவி போல கொட்டியது. இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Updated On: 21 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்