/* */

போடி கொட்டகுடி ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

போடி கொட்டகுடி ஆற்றில் பேதார் அணைப்பிரிவில் தடுப்பணை கட்டி ஆற்று நீரை கண்மாய்களுக்கு திருப்பி விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

HIGHLIGHTS

போடி கொட்டகுடி ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
X

போடி கொட்டகுடி ஆற்றில் ஆய்வு செய்த விவசாய சங்கத்தினர்.

போடி கொட்டகுடி ஆற்றில் பேதார் அணை பிரிவிலிருந்து கால்வாய் அமைத்து கண்மாய்களுக்கு நீர் கொண்டு வர வேண்டும் என தேனி மாவட்ட விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், போடி கொட்டகுடி ஆற்றில் விவசாய சங்கத்தினர் இன்று ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தேனி அருகே உள்ள பூதிப்புரம் கண்மாய், அல்லிநகரம் கண்மாய், அன்னஞ்சி ஓடை கண்மாய், பொம்மைய கவுண்டன் பட்டி கண்மாய்களுக்கு கொட்டகுடி ஆற்றின் பேதார் அணை பிரிவிலிருந்து கால்வாய் அமைத்து தண்ணீர் திருப்பி விட வேண்டும்.

இதனால் இந்த கண்மாய்களில் நீர் வளம் அதிகரிப்பதோடு, கால்வாய் வரும் வழியில் உள்ள நிலங்களில் இருக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் பம்பு செட்டு உள்ள கிணறுகளுக்கு நீர் ஆதாரம் கிடைத்து விவசாயம் செழிக்கும்.

தற்போதைய சூழலில் கிணறுகளில் நீர் வரண்டு விட்டது. இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் நீர் சென்று விட்டது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆனால், கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தங்களது விவசாய நிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றும் அவலம் அரங்கேறி வருகிறது.

எனவே கொட்டக்குடி ஆற்றின் பேதார் அணை பிரிவிலிருந்து புதிய கால்வாய் அரசு அமைத்துக் கொடுத்து கண்மாய்களில் நீர் நிரப்பினால், பல ஆயிரம் விவசாய குடும்பங்களை பாதுகாக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 22 July 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!