மிட்டாய் தயாரிக்க சொன்னதால் பொறியியல் பட்டதாரி தற்கொலை
பைல் படம்.
போடி தர்மத்துப்பட்டி கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் மகன் சூர்யா, 23. இவர் பொறியியல் படிப்பு முடித்துள்ளார்.
வெளியூரில் வேலைக்கு விண்ணப்பித்திருந்த அவருக்கு வேலையும் கிடைத்து விட்டது. அதற்காக அவர் ஊருக்கு கிளம்ப திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது தந்தையும், குடும்பத்தினரும், தங்களது குடும்ப தொழிலான மிட்டாய் தயாரிக்கும் தொழிலை நீ தான் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் அவர் வெளியூருக்கு வேலைக்கு செல்லவும் சம்மதிக்கவில்லை. இதனால் தன்னைப்போய் பொறிகடலை மிட்டாய் உருண்டை விற்க சொல்கிறார்களே என மனம் உடைந்த சூர்யா, விஷம் குடித்தார்.
இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இது குறித்து . போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu