/* */

தார் ரோட்டில் திடீர் பள்ளம்: பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

போடியில், மக்கள் அதிக நடமாட்டம் உள்ள மெயின் ரோட்டில் திடீர் என பள்ளம் உருவாகி விபத்திற்கு வழிவகுத்துள்ளது.

HIGHLIGHTS

தார் ரோட்டில் திடீர் பள்ளம்: பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
X

போடி, கீழராஜவீதியில் இருந்து சர்ச் செல்லும் மெயின் ரோட்டில் ஏற்பட்ட பள்ளம்.

தேனி மாவட்டம், போடி, கீழராஜவீதியில் இருந்து சர்ச் செல்லும் மெயின் தெரு அமைந்துள்ளது. இந்த தார் ரோட்டில் இன்று திடீரென பள்ளம் ஒன்று உருவாகி உள்ளது. இதனை கவனிக்காமல் ரோட்டில் நடந்து செல்பவர்கள் பள்ளத்தில் கால் தடுக்கி விழும் அபாயம் உள்ளது. தற்காலிகமாக, பள்ளத்தை சுற்றி ஒருசில கற்கள் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு தார்ரோடு அமைக்கும் முன்னர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தை சரியாக மூடாமல், தார்ரோடு பெயரளவிற்கு அமைத்துள்ளனர். இதனால் தற்போது மழையில் பள்ளம் உருவாகி உள்ளதாக தெரிகிறது. தரம் குறைந்த பணிகளை செய்த கான்ட்ராக்டர்கள், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கு முன்பாக, பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?