Begin typing your search above and press return to search.
கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பொன்மொழி போட்டி: பங்கேற்க கலெக்டர் அழைப்பு
கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பொன்மொழி போட்டியில் பங்கேற்குமாறு கலெக்டர் முரளீதரன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்கும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பொன்மொழி போட்டி நடக்கிறது.
வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் இரண்டு வரிகளில் பொன்மொழி எழுத வேண்டும். அதன் கீழே அவர்களின் பெயர், மொபைல் எண், எழுத வேண்டும். ஒருவர் எத்தனை பொன்மொழிகள் வேண்டுமானாலும் எழுதலாம். நவ. 30ம் தேதிக்குள், வட்டார போக்குவரத்து அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தேனி, 625531 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.