/* */

தேனி அருகே மலைவாழ் மக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்

போடி சிறைக்காடு மலைக்கிராமத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மலைவாழ் மக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டார்.

HIGHLIGHTS

தேனி அருகே மலைவாழ் மக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்
X

போடிநாயக்கனூர் அருகே உள்ள மலைவாழ் மக்களிடம் உரையாடும் ஆட்சியர் முரளிதரன்.

தேனி கலெக்டர் முரளிதரன் மாவட்டம் முழுவதும் சென்று கிராம மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு தீர்வுகாண முயற்சித்து வருகிறார். போடி அருகே மலைப்பகுதியில் உள்ள சிறைக்காடு என்ற மலைக்கிராமத்திற்கு அவர் சென்றிருந்தார். அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அங்குள்ள மக்கள் தங்களுக்கு குடிநீர், மின்சாரம், ரோடு, தெருவிளக்கு, சாக்கடை வசதிகள் வேண்டும். வீடு கட்ட அரசு நிதி உதவி வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதனை நிறைவேற்றித்தருவதாக உறுதி அளித்த கலெக்டர், கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பின்னர் திடீரென மலைவாழ் மக்களிடம் 'எனக்கு சாப்பிட ஏதாவது தருவீர்களா?' என கேட்டார். அவர்கள் கொடுத்த உணவை சிறிது சாப்பிட்டு நன்றாக உள்ளது என பாராட்டினார்.

Updated On: 29 July 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்