/* */

தேனியில் போலீஸ் தாக்கியதாக கூறி வாலிபர் மருத்துவமனையில் அனுமதி

போலீஸ் தாக்கியதாக கூறி டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர், தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

தேனியில் போலீஸ் தாக்கியதாக கூறி  வாலிபர் மருத்துவமனையில் அனுமதி
X

போலீஸ் அடித்து துன்புறுத்தியதாக கூறி தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாலிபர் சதீஷ்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ், இவர், சந்தகேத்தின் அடிப்படையில் கோம்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை போலீஸ் காவலில் வைத்து அடித்துள்ளனர்.

இதனால் பலத்த காயம் அடைந்ததாக கூறி சதீஷ் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சதீஷ் கூறியதாவது: நான் என் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கோம்பைக்கு சென்றேன். அப்போது போலீசார் என்னை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். ஸ்டேஷனில் நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்தனர். நெஞ்சு, வயிறு பகுதியில் ஷூ காலால் கடுமையாக உதைத்தனர்.

இதில் நான் ரத்தவாந்தி எடுத்தேன். பலத்த காயத்துடன் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உறவினர்கள் கோம்பை போலீசார் மீது கலெக்டரிடம் புகார் செய்துள்ளனர் என்றார்.

Updated On: 17 Oct 2021 10:02 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  2. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  3. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  4. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  6. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  7. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  9. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்