/* */

உயிரை பறித்த அதிக வேகம்: சின்னமனூர் அருகே விபத்தில் 2 மாணவர்கள் பலி

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே நடைபெற்ற டூ வீலர் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர் பலியாகினர்.

HIGHLIGHTS

உயிரை பறித்த அதிக வேகம்: சின்னமனூர் அருகே   விபத்தில் 2 மாணவர்கள் பலி
X

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்தவர்கள் அபிமன்யூ, நாகராஜ். இவர்கள் இருவரும் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 3 ஆம் ஆண்டு மெக்கானிக் படித்து வந்தனர். இன்று மாலை, கல்லுாரி முடிந்து டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

வேப்பம்பட்டி- அழகாபுரி ரோட்டில் பெரும்பாலும் வாகன நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இதனால், அந்த ரோட்டில் அதிக வேகமாக டூ வீலரில், இருவரும் சென்றுள்ளனர். அழகாபுரி விலக்கு அருகே, டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து தோட்டத்து வேலிக்கு அமைக்கப்பட்டிருந்த கல் கம்பத்தில் மோதியது; இதில், டூ வீலர் டயர் வெடித்தது.

இந்த விபத்தில், இருவரும் சுமார் 30 அடி துாரம் துாக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவரும், சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?