/* */

போடி அருகே தோட்டத்து கிணற்றில் மீன் பிடித்த சிறுவன் தவறி விழுந்து பலி

தேனி மாவட்டம் போடி ஒத்தவீடு அருகே கிணற்றின் சுவரில் அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து பலியானான்

HIGHLIGHTS

போடி அருகே தோட்டத்து கிணற்றில் மீன் பிடித்த சிறுவன் தவறி விழுந்து பலி
X

கிணற்றில் தவறி விழுந்து பலியான சிறுவன்

தேனி மாவட்டம், போடி அருகே கோடாங்கிபட்டி கிராமம் ஒத்தவீட்டு பகுதியில் வசிப்பவர் திரவியம். இவரது மகன் அகிலேஷ், வயது ஏழு.

இவன் இங்குள்ள தனியார் தோட்டத்து கிணற்றின் சுவரில் அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தான். அந்த கிணறு 50 அடி வரை ஆழம் கொண்டது. தற்போது மழைக்காலம் என்பதால் நாற்பது அடிவரை தண்ணீர் உள்ளது. இந்நிலையில் மீன்பிடிக்கும் ஆர்வத்தில் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த சிறுவன் தவறி உள்ளே விழுந்தான்.

உடன் இருந்த சிறுவர்கள் கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தனர். கிராம மக்கள் போடி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறையினர் வந்து சிறுவன் உடலை மீட்டனர். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 25 July 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு