/* */

யூடியூப்பில் அவதூறு பாடல் நீக்க தேனி மாவட்ட விவசாயிகள் கலெக்டரிடம் மனு

முல்லைப்பெரியாறு அணை பற்றி அவதுாறு பரப்பும் வகையில் கேரள யூடியூப் சேனல்களில் ஒலிபரப்பாகும் பாடல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

யூடியூப்பில் அவதூறு பாடல்  நீக்க தேனி மாவட்ட விவசாயிகள் கலெக்டரிடம் மனு
X

தேனி மாவட்ட கலெக்டரிடம் விவசாய சங்க தலைவர்கள் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்ட பாரதீய கிஷான் சங்க தலைவர் சதீஸ்பாபு, முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், பொருளாளர் ஜெயபால், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயலாளர் சிவனாண்டி, துணைத்தலைவர் ராஜா உட்பட பலர் தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரனை சந்தித்தனர்.

கேரளாவில் ஒரு தனியார் யூடியூப் சேனலில் முல்லைப்பெரியாறு அணை பற்றி அவதூறு பரப்பும் வகையிலான 3 நிமிட பாடல் ஒலிபரப்பி வருகின்றனர். 13 பேர் இந்த பாடலை தயாரித்துள்ளனர். இந்த பாடலில் முல்லைப்பெரியாறு அணை பற்றி பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஏதும் அறியாத அப்பாவி மக்களை அச்சப்படுத்தி, அவர்களை முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக திசை திருப்ப வேண்டும் என்பதே இவர்களின் இலக்கு ஆகும்.

தேனி கலெக்டர் தமிழக அரசு மூலம் இந்த விஷயத்தில் தலையிட்டு அவதுாறு பாடலை நிறுத்த வேண்டும். இந்த பாடல் தயாரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். கேரளாவில் ஒலிபரப்பபட்டு வரும் இந்த அவதூறு பாடலை நிறுத்தாவிட்டால், தமிழகத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என மனு கொடுத்த விவசாயிகள் அனைவரும் தெரிவித்தனர்.

Updated On: 9 Aug 2022 9:13 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!