/* */

தேனி மாவட்டத்தில் 3வது முறையாக ஜீரோ தொற்று: மாவட்ட சுகாதாரத்துறை நிம்மதி

தேனி மாவட்டத்தில் இன்று மூன்றாவது முறையாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 3வது முறையாக ஜீரோ தொற்று: மாவட்ட சுகாதாரத்துறை நிம்மதி
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் இன்று மூன்றாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினமும் சராசரியா 900 முதல் 1200 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் தினமும் காலையில் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் மூலம் வெளியாகும்.

இந்த மாதத்தில் மட்டும் இதற்கு முன்னர் இரண்டு நாள் கொரோனா தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை என அறிவிக்கப்பட்டது. இன்றும் மூன்றாவது முறையாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தேனி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் யாராவது கொரோனா பரிசோதனை செய்திருந்து அவர்களுக்கு பாசிட்டிவ் என முடிவு வெளிவந்தால், அவர்கள் நேரடியாக தமிழக சுகாதாரத்துறைக்கு தெரிவிப்பார்கள். அந்த கணக்கு அரசு வெளியிடும் மீடியா புல்லட்டின் அறிக்கையில் வெளியாகும்.

எப்படி இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களாகவே ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு மூன்றாவது முறையாக சைபரை தொட்டுள்ளது ஆறுதலாக உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.

Updated On: 29 Oct 2021 12:07 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...