/* */

வருஷநாட்டில் மதுபாராக செயல்படும் கிராம ஊராட்சியின் சேவை மையம்

தேனி மாவட்டம் வருஷநாட்டில் மகளிர் மேம்பாட்டிற்காக கட்டப்பட்ட சுயஉதவிக்குழு கட்டடம் மதுபாராக மாறி உள்ளது -மக்கள் வேதனை.

HIGHLIGHTS

வருஷநாட்டில் மதுபாராக செயல்படும் கிராம ஊராட்சியின் சேவை மையம்
X

மதுபார் ஆக மாறி உள்ள தேனி மாவட்டம் வருஷநாடு கிராம ஊராட்சி சேவை மையம்.

தேனி மாவட்டம் வருஷநாடு ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கிராம சேவை மையம் மதுபாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் செயல்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் வருஷநாடு கிராம ஊராட்சியில் 13.12 லட்சம் ரூபாய் செலவில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது. கட்டிய நாள் முதல் தற்போது வரை ஒரு நாள் கூட பயன்பாட்டிற்கு வரவில்லை. கிராம ஊராட்சி நிர்வாகமும் இந்த சேவை மையத்தை கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டது. வருஷநாடு ஊராட்சியில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவது மட்டுமின்றி, நான்கு இடங்களில் அனுமதியற்ற முறையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

போலீசாரும் இந்த அனுமதியற்ற மது விற்பனையை கண்டு கொள்ளவில்லை. இங்கு பாட்டில்களை வாங்கி வரும் குடிமகன்கள், கிராம ஊராட்சி கட்டடத்திற்குள் சென்று அமர்ந்து குடிக்கின்றனர்.

அங்கேயே தான் எல்லாமும் நடக்கிறது. போலீசாரோ, கிராம ஊராட்சி நிர்வாகமோ இதனை கண்டுகொள்ளவில்லை. பல லட்சம் செலவு செய்து, மகளிர் வளர்ச்சிக்காக அரசு கட்டிய சேவை மைய கட்டடம், குடிமகன்களுக்காவது பயன்படுகிறதே என வருஷநாடு கிராம ஊராட்சி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Updated On: 5 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  3. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  4. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  6. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  7. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  8. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  9. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்