/* */

சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்ய மாதம் ரூ.25 ஆயிரம் அரசு வழங்கல்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிறுநீரக நோயாளிகள் வீட்டிலேயே டயாலஸிஸ் செய்து கொள்ள அரசு ரூ.25 ஆயிரம் வழங்குகிறது.

HIGHLIGHTS

சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்ய மாதம் ரூ.25 ஆயிரம் அரசு வழங்கல்
X

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வயறு டயாலஸிஸ் திட்டத்தின் கீழ் நோயாளிக்கு கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதன் மருத்துவ  உபகரணங்கள், மருந்துகளை இலவசமாக வழங்கினார்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வயறு டயாலிஸிஸ் (peritoneal dialysis) என்ற நவீன சுத்திகரிப்பு சிகிச்சை வசதி தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார். சிறுநீரகவியல்துறை தலைவர் டாக்டர் ராஜ்குமார், மருத்துவத்துறை தலைவர் டாக்டர் திருநாவுக்கரசு, மருத்துவ கண்காணிப்பாளர் இளங்கோவன், குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அசோக், சிறுநீரகவியல் சிறப்பு டாக்டர் மு.காமராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

வயறு டயாலஸிஸ் என்பது நவீன சுத்திகரிப்பு சிகிச்சை முறை ஆகும். இந்த சிகிச்சையினை வீட்டில் இருந்தவாறே நோயாளிகள் செய்து கொள்ளலாம். இதற்கு தேவையான உபகரணங்கள், மருந்துகளை அரசு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நோயாளிகளின் வீட்டிற்கே சென்று மாதந்தோறும் வழங்குகிறது. ஒரு மாதத்திற்கு இந்த திட்டத்தில் ஒரு நோயாளிக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுத்திகரிப்பு உபகரணங்கள், மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் சேர முதன் முறை மட்டும் நோயாளி மருத்துவமனைக்கு வர வேண்டும். அப்போது அவருக்கு தொடர் சிகிச்சை முறைகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். அடுத்தடுத்து மருந்துகள், உபகரணங்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். அரசு மிகவும் அதிகளவு சலுகை வழங்கி வருகிறது. இந்த திட்டம் அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 24 Oct 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  2. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  3. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  7. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  8. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  9. காஞ்சிபுரம்
    மூன்றே மாதம்தான் பயணியர் நிழற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது...!
  10. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...