/* */

கிராம மக்களை சிறைபிடித்த வனத்துறை: நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் விடுவிப்பு

மேகமலை வனப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய சென்ற கிராம மக்களை வனத்துறை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கிராம மக்களை சிறைபிடித்த வனத்துறை: நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் விடுவிப்பு
X

வனநிலங்களில் விவசாயம் செய்ய சென்ற கிராம மக்களை சிறைபிடித்தவனத்துறை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்குள்ள வனநிலங்களில் விவசாயம் செய்யக்கூடாது என மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. இந்த வன நிலங்களில் இதற்கு முன் விவசாயம் செய்திருந்தால், அந்த சாகுபடியினை எடுத்துக் கொள்ளலாம். புதிய விவசாயம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசரடி கிராம மக்கள் தாங்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்த நிலங்களில் மீண்டும் விவசாயம் செய்வோம் எனக்கூறி வனத்திற்குள் புறப்பட்டனர். அவர்களை மேகமலை வனத்துறையினர் சிறை பிடித்தனர்.

அதிகாரிகளும், பொதுமக்களும் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்கள் அவர்களது கிராமத்திற்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர்.

Updated On: 12 Oct 2021 12:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...