/* */

கூடலுாரை கலக்கிய அ.தி.மு.க., பெண் வேட்பாளர்கள்: கட்சியினர் உற்சாகம்

கூடலுார் நகராட்சி பெண் வேட்பாளர்கள் ஐந்து பேர் ஒருங்கிணைந்து வார்டுகளில் இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தனர்.

HIGHLIGHTS

கூடலுாரை கலக்கிய அ.தி.மு.க., பெண் வேட்பாளர்கள்: கட்சியினர் உற்சாகம்
X

கூடலுார் நகராட்சியில் அ.தி.மு.க., பெண் வேட்பாளர்கள் ஐந்து பேர் ஒருங்கிணைந்து ஓட்டு சேகரித்தனர். இடமிருந்து இரண்டாவதாக இருப்பவர் சேர்மன் வேட்பாளர் பா.லோகநாயகி.

கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. அத்தனை வார்டுகளிலும் அ.தி.மு.க., களம் இறங்கியுள்ளது. இதில் 6வது வர்டில் மட்டும் அ.தி.மு.க., வேட்பாளர் திடீரென வாபஸ் பெற்றார்.

தற்போதைய சூழலில் 11 வார்டில் அ.தி.மு.க., சார்பில் பெண் வேட்பாளர்களும், 9 வார்டில் ஆண் வேட்பாளர்களும் நிற்கின்றனர். அ.தி.மு.க., சார்பி்ல் சேர்மன் வேட்பாளராக 16வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் பா.லோகநாயகி களம் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் பா.லோகநாயகி, 5வது வார்டு வேட்பாளர் சுபீதா, 12 வது வார்டு வேட்பாளர் சாந்தி, 14வது வார்டு வேட்பாளர் முத்துமணி, 15வது வார்டு வேட்பாளர் தேவதர்ஷினி ஆகியோர் ஒருங்கிணைந்து இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தனர். 16வது வார்டில் தொடங்கிய பிரச்சாரம் தொடர்ச்சியாக 5, 12, 14, 15 ஆகிய வார்டுகளில் நடைபெற்றது. பெண் வேட்பாளர்கள் ஒருங்கிணைந்து பிரச்சாரம் செய்தது அ.தி.மு.க.,வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 13 Feb 2022 7:09 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...