முக்கியபிரமுகர்களை சந்தித்து ஓட்டு சேகரித்த அதிமுக வேட்பாளர்

முக்கியபிரமுகர்களை சந்தித்து ஓட்டு சேகரித்த  அதிமுக வேட்பாளர்
X

தேனி நகராட்சி இருபத்தி ஓன்பதாவது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் ஆசிரியை ஷீலா முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

தேனி நகராட்சி 29வது வார்டு அதிமுக வேட்பாளர் ஷீலா தனது வார்டில் உள்ள விஐபி -களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.

தேனி நகராட்சி 29வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் ஆசிரியை ஷீலா இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்கி உள்ளார். இவர் தனது வார்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். இன்று காலை முதல் வார்டில் செய்ய வேண்டிய வளர்ச்சிப்பணிகளை தனது குழுவினருடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தனது குழுவினருடன் வார்டில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து அனைவரிடமும் வாழ்த்து பெற்றார். இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். தனது வார்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முக்கிய பிரமுகர்களிடம் ஆலோசனை செய்தார்.

Tags

Next Story
வீட்டிலே விவசாய கல்வி: Online Agricultural Training மூலம் உங்க Career-ஐ மாத்துங்க!