/* */

தேனீக்களிடம் கொட்டு வாங்கிய தேனி கலெக்டர், அமைச்சர்கள் எஸ்கேப்

வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் தேன்கூடு கலைந்ததால், கலெக்டர் முரளிதரன், தேனீக்களிடம் கொட்டு வாங்கினார். அமைச்சர்கள் நூலிழையில் தப்பினர்.

HIGHLIGHTS

தேனீக்களிடம் கொட்டு வாங்கிய தேனி கலெக்டர்,  அமைச்சர்கள் எஸ்கேப்
X

தேனி மாவட்டத்தில் வைகை அணை திறப்பின் போது தேனீக்களிடம் கொட்டு வாங்கிய அதிகாரிகள்.

இன்று காலை நான்கு மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து அமைச்சர்கள் பெரியசாமி, மூர்த்தி உட்பட பலர் தண்ணீர் திறந்து விட்டனர்.

இந்த நிகழ்ச்சியி்ல் தேனி கலெக்டர் முரளிதரன், பெரியாறு- வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் உட்பட ஏராளமான பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் தண்ணீர் திறந்ததும், பாலத்திற்கு அடியில் கட்டப்பட்டிருந்த தேன்கூடு கலைந்தது. தேனீக்கள் பறந்து கலெக்டர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் உட்பட 8 பேரை பலமாக கொட்டியது.

சுதாரித்துக் கொண்ட அமைச்சர்களும், மற்ற அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும் அங்கிருந்து வெளியேறினர். தேனீக்களிடம் கொட்டு வாங்கிய தேனீ கலெக்டர் உட்பட 8 பேர் உடனடியாக மீட்டு தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அத்தனை பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களை கலெக்டர் முரளிதரன் சந்தித்து நலம் விசாரித்தார்.

Updated On: 12 Aug 2021 5:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்