Begin typing your search above and press return to search.
கம்பம் அருகே விபத்தில் சின்னமனூர் தீயணைப்பு வீரர் பலி
கம்பம் அருகே, டூ வீலரில் சென்ற தீயணைப்பு படை வீரர் டிராக்டர் மீது மோதி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
தேனி மாவட்டம், சின்னமனுார் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிபவர் சத்தியமூர்த்தி, இவர் பணி முடித்து தனது சொந்த ஊரான கம்பம் புதுப்பட்டிக்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்தார்.
அனுமந்தன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, முகப்பு விளக்கு எரியாமல் வந்த டிராக்டர் மீது டூ வீலர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேய சத்தியமூர்த்தி இறந்தார். உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.