/* */

கிணறு தோண்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி: உறவினர்கள் சாலை மறியல்

போடிநாயக்கனூரில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மண் சரிந்த விபத்தில் உயிரிழந்தார்

HIGHLIGHTS

கிணறு தோண்டும் போது மண் சரிந்து  தொழிலாளி பலி: உறவினர்கள் சாலை மறியல்
X

கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த  தொழிலாளி மண் சரிந்து பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ரோடு மறியல் செய்தனர்.

போடியில் கிணறு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

போடி- மூணாறு மெயின் ரோட்டோரம் உள்ள விவசாய தரிசு நிலத்தில் இருந்த தனியாருக்கு சொந்தமான கிணறு மழையால் சேரும், சகதியுமாக இருந்தது. இந்த கிணற்றை சுத்தம் செய்ய பண்ணைத்தோப்பை சேர்ந்த மூன்று பேரும், பத்திரகாளிபுரத்தை சேர்ந்த நான்கு பேரும் வேலைக்கு வந்தனர்.

பண்ணைத்தோப்பை சேர்ந்த பெரியகருப்பன்( 40,), கனகராஜ்( 52,) பத்திரகாளிபுரத்தை சேர்ந்த உதயசூரியன்( 55 ) ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கி மண்ணை தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது படிக்கட்டுப்பகுதி சரிந்து இவர்கள் மீது விழுந்தது. இதில் பெரியகருப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உதயசூரியன் பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் தப்பினர். இறந்த பெரியகருப்பனின் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ராமலட்சுமி ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

Updated On: 27 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...