தேனியில் மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று

தேனியில் மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா நோய் தொற்று பதிவாகி உள்ளது.

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் வகை திரிபு கொரோனா வேகமாக பரவி வருகிறது. மூன்று தடுப்பூசி போட்டவர்களுக்கும் கூட பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மெல்ல, மெல்ல பதிவாகி வந்த தொற்று நேற்று 19 ஆக உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்தது. இன்று 28 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 162 பேர் பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர்.

இதில் 28 பேருக்கு தொற்று பதிவாகி உள்ளது. சராசரி தொற்று பதிவு 16.6 சதவீதம் ஆக பதிவாகி உள்ளது. இது அதிகளவு ஆகும். எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture