/* */

கேரளாவில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கேரளாவில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி
X

பைல் படம்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மழைக்கால தொற்று நோய்களான டெங்கு, எலிக்காய்ச்சல், கொரோனா தொற்று, சிக்குன்குனியா காய்ச்சல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை, கருணாபுரம் ஊராட்சிகளில் தக்காளி காய்ச்சலும் பரவி வருகிறது.

நெங்கண்டம் அருகே கல்லாறு அரசு தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., படிக்கும் 20 மாணவ, மாணவிகளுக்கு உடலில் கொப்புளம், அரிப்பு, காய்ச்சல் ஏற்பட்டது. தலைமை ஆசிரியரின் அழைப்பினை ஏற்று பள்ளிக்கு சென்ற மருத்துவக்குழு மாணவர்களை பரிசோதித்து தக்காளி காய்ச்சலை உறுதிப்படுத்தியது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தக்காளி காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து தேனி மாவட்ட எல்லைகளில் சுகாதார எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

Updated On: 30 Jun 2022 6:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...