ஆண்டிபட்டியில் டிராக்டர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
![ஆண்டிபட்டியில் டிராக்டர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு ஆண்டிபட்டியில் டிராக்டர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு](https://www.nativenews.in/h-upload/2022/03/31/1506929-death2.webp)
ஆண்டிபட்டி ரோசனப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ், 38. ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர்கள் இருவரும் ராசாத்தி, போதுமணி, வேலு ஆகியோரை ஏற்றிக் கொண்டு டிராக்டரில் ஆண்டிபட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். ஆண்டிபட்டி சிவசக்தி தியேட்டர் அருகே இவர்கள் வரும் போது மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் நிலைகுலைந்த டிராகடர் ரோடு தடுப்புகளை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் நாகராஜ், தங்கராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ராசாத்தி, போதுமணி, வேலு, மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த அஜீத், முனிராஜ் ஆகிய ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu