/* */

தேனி மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ் 2 தேர்வினை எழுதும் 14,893 மாணவர்கள்

தேனி மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ் 2 தேர்வினை 14 ஆயிரத்து 893 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ் 2 தேர்வினை எழுதும் 14,893 மாணவர்கள்
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ் 2 தேர்வு வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. 142 பள்ளிகளை சேர்ந்த 7433 மாணவர்கள், 7460 மாணவிகள் உட்பட மொத்தம் 14 ஆயிரத்து 893 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 53 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தவிர 601 தனித்தேர்வர்கள் 3 மையங்களில் எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வு மே 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது.142 பள்ளிகளை சேர்ந்த 8033 மாணவர்கள், 7498 மாணவிகள் உட்பட மொத்தம் 15531 பேர் எழுதுகின்றனர். இவர்களும் 53 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு மே 6ம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. 202 பள்ளிகளை சேர்ந்த 8412 மாணவர்கள், 7549 மாணவிகள் உட்பட மொத்தம் 15 ஆயிரத்து 961 மாணவ, மாணவிகள் 66 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வுப்பணியில் 3500 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இத்தேர்வுகளை கண்காணிக்க 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 May 2022 3:06 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு