/* */

ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது: உயர்நீதிமன்றம்

"ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது; நில அபகரிப்புகள் நடக்கிறது, நீர் நிலைகள் மாயமாகிறது." என்றும் தனது அதிருப்தியைத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது: உயர்நீதிமன்றம்
X

கடந்த மூன்று ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.70,060 கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷணன் தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2019ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், சர்ச்சைக்குரிய கோபாலகிருஷணன் செங்கல்பட்டு மாவட்ட சார் பதிவாளராக நியமிப்பதாக அறிவித்திருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பையடுத்து, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கருப்பு எழுத்து கழகம் எனும் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி சுதந்திரமாகச் செயல்படுகிறதா? கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை கையாண்டுள்ளது? என்று சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும், இது குறித்த விவரங்களை மூன்று வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மட்டுமல்லாது, "ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது; நில அபகரிப்புகள் நடக்கிறது, நீர் நிலைகள் மாயமாகிறது." என்றும் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

Updated On: 8 April 2021 6:09 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  2. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  3. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  7. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  8. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  9. காஞ்சிபுரம்
    மூன்றே மாதம்தான் பயணியர் நிழற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது...!
  10. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...