/* */

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே வாலிபர் தற்கொலை

திருவிடைமருதூர் அருகே, திருப்பனந்தாள் சின்ன கட்டாநகரம் பகுதியில், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே வாலிபர் தற்கொலை
X

திருப்பனந்தாள் சின்ன கட்டாநகரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் விஜய் (25). இவர் தனது தாய் ஊரான காரைக்காலில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வேலை ஏதும் செய்யாமல் இருந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காரைக்காலில் இருந்து திருப்பனந்தாள் வந்துள்ளார்.

கடந்த 12ஆம் தேதி, சின்ன கட்டாநகரம் நாரை வாய்க்கால் அருகே மதுவுடன் சேர்த்து வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துள்ளார்.

காலையில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் காவல்துறையினர் சென்று விஜயின் உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Updated On: 13 March 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  2. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  3. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  4. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  6. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  7. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  8. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  10. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...