/* */

பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி, போலீசார் விசாரணை

HIGHLIGHTS

பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி
X

ஏடிஎம் மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் பேங்க் ஆப் பரோடா வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இம்மையத்தில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பணம் நிரப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரை கம்பியை கொண்டு உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு ஏடிஎம் மையம் உடைக்கப்படுவது குறித்து சிக்னல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வங்கி நிர்வாகம் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் மக்கள் அங்கு வருவதை பார்த்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால், உரிய நேரத்தில் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது.

கொள்ளை முயற்சி சம்பவத்தில் மூன்று நபர்கள் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஏடிஎம் மையத்தில் பதிவான கைரேகைகளை தடய அறிவியல் நிபுணர்கள் பதிவு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. பொன்னேரி
    எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு...
  5. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  6. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
  7. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  9. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!