/* */

திருவிடைமருதூர் தொகுதியில் பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ள அங்காடிகளை இரண்டாக பிரிக்கப்பட்டு பகுதி நேரக்கடைகளாக உருவாக்கப்பட்டன.

HIGHLIGHTS

திருவிடைமருதூர் தொகுதியில் பகுதி நேர நியாயவிலைக்கடை  திறப்பு
X

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதியில் புதிய பகுதி நேர அங்காடிகளை தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் திறந்து வைத்தனர்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதியில் புதிய பகுதி நேர அங்காடிகளை தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.

தேப்பெருமாநல்லூர், சுண்ணாம்புக்காரத் தெரு, திருப்பணிப்பேட்டை, கதிராமங்கலம், குணதலைபாடி ஆகிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ள அங்காடிகளை இரண்டாக பிரிக்கப்பட்டு பகுதி நேரக்கடைகளாக உருவாக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, ஒன்றிய துணை பெருந்தலைவர் கருணாநிதி, பேரூர் செயலாளர் சுந்தரஜெயபால், திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜா, நாகரசம் பேட்டை சரவணன், சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் அயூப்கான், மேலாண்மை இயக்குனர் மாரீஸ்வரன், பொது மேலாளர் கோபிநாத், தேப்பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் மற்றும் வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தேப்பெருமாநல்லூர் ஊராட்சி சண்முகம் நகரில் புதிய மின்மாற்றி இயக்கி வைக்கப்பட்டது.

Updated On: 19 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...