/* */

பிரதமரை சந்திக்கும் மதுரை ஆதீனம்! பட்டன பிரவேச சர்ச்சை விஸ்வரூபம்

கஞ்சனூர் கோவில், மதுரை ஆதீனம் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜகவினருக்கும் செய்தியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

HIGHLIGHTS

பிரதமரை சந்திக்கும் மதுரை ஆதீனம்! பட்டன பிரவேச சர்ச்சை விஸ்வரூபம்
X

கஞ்சனூருக்கு வருகை தந்த மதுரை ஆதீனம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே, மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனூர் சுக்ரன் ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு சுவாமி தரிசனத்திற்காக மதுரை ஆதீனம் நேற்றிரவு வந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தனக்கு மிரட்டல் இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டார்.

விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன் என்றும் தெரிவித்த அவர், பட்டினப்பிரவேசம் பல்லாக்கு தொடர்பான கேள்விக்கு இந்தக் கேள்வி வேண்டாம் என்று கூறி, தவிர்த்தார். கஞ்சனூர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகை பாக்கி உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு மதுரை ஆதினம் பதில் கூறுவதற்கு முன்பாக அங்கிருந்த பாஜகவை சேர்ந்தவர்கள் செய்தியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

இதன் காரணமாக, செய்தியாளர்களுக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து செய்தியாளர்கள் மதுரை ஆதீனம் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் கஞ்சனூர் கோவிலில் பரபரப்பு நிலவியது. அங்கிருந்த சிலர் செய்தியாளர்களை சமாதானப்படுத்தி தர்ணாவிலிருந்து கலைந்து போக செய்துள்ளனர்.

Updated On: 5 May 2022 6:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!