/* */

பைனான்சியரின் மனைவி, மாமியார் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை

திருவிடைமருதூர் அருகே பைனான்சியரின் மனைவி, மாமியார் இருவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பைனான்சியரின் மனைவி, மாமியார் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை
X

பைல் படம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பழகன் (50). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 30 வருடங்களாக இங்கு வசித்து வருகிறார். இவரது மனைவி ராணி (38). இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பாளப்பட்டி கிராமம். இவர்களுக்கு லோகேஷ் என்ற தனியார் கல்லூரியில் படிக்கும் மகனும், யோகிதா என்ற 10ம் படிக்கும் மகளும் உள்ளனர்.

இவர்களது வீட்டில் ராணியின் தாயார் மீனாட்சி (65) கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருந்து வந்துள்ளார். இதனால் அன்பழகன் தனது மனைவியிடம் உனது தாயை ஊருக்கு அனுப்பி வை என்று வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனமுடைந்த தாய், மகள் இருவரும் இரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் போலீசார் பிரேதங்களை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் தாய் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 6 Jun 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு