16 வயது மாணவி கர்ப்பம் - வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

16 வயது மாணவி கர்ப்பம் - வாலிபர் போக்சோ சட்டத்தில்  கைது
X
திருவையாறு அருகே 16 வயது மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோ்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவியை, வளப்பக்குடியைச் சோ்ந்த தங்கையன் மகன் சாமிநாதன் (27) காதலித்து வந்தாா். அப்போது, அச்சிறுமியை சாமிநாதன் ஏமாற்றி கா்ப்பமாக்கியுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சாமிநாதனை கைது செய்தனா்.

Tags

Next Story
ai in future agriculture