கபிஸ்தலம் அருகே காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

கபிஸ்தலம் அருகே காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

பைல் படம்

கபிஸ்தலம் அருகே காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கபிஸ்தலம் அருகே உள்ள வடசருக்கை மெயின்ரோட்டில் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் ஒதுங்கியது.

முகம் சிதைந்தும், வெள்ளை நிற பனியன், பச்சை நிற கைலி, கட்டிய சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதனை கண்ட கிராமவாசிகள் உடனடியாக சருக்கை கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.

புகாரின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் கதிர்வேல் கபிஸ்தலம் காவல் நிலையத்தில் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி மற்றும் போலீசார் அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவர் யார்? எப்படி இறந்தார்? யாராவது இவரை அடித்துக் கொலை செய்து உள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags

Next Story