/* */

தைஅமாவாசை - தர்ப்பணம் செய்ய தடை

தைஅமாவாசை - தர்ப்பணம் செய்ய தடை
X

திருவையாறில் நாளை (பிப் 11 ம் தேதி) தை அமாவாசையை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவேரி ஆற்று படித்துறையில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஆண்டு தோறும் தை அமாவாசை அன்று வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து திருவையாறு காவேரி ஆற்று புஷ்ப மண்டப படித்துறையில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்து, ஐயாறப்பரை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகமாகி உள்ள காரணத்தினால் பொதுமக்கள் நலன் கருதி, திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவையாறு பகுதிகளில் உள்ள காவேரி ஆற்று படித்துறைகளில் குளிப்பதற்கும், தர்ப்பணம் செய்வதற்கும் தடைவிதித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் யாரும் திருவையாறுக்கு நீராடவோ, தர்ப்பணம் செய்யவோ வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

Updated On: 10 Feb 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க