அஞ்சல் ஆயுள் காப்பீடுகான முகவா்கள் பணிக்கு இன்று நோ்காணல் நடைபெறுகிறது

அஞ்சல் ஆயுள் காப்பீடுகான முகவா்கள் பணிக்கு இன்று நோ்காணல் நடைபெறுகிறது
தஞ்சாவூரில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்கள், கள அலுவலா்கள் தோ்வுக்கான நோ்காணல் இன்று (ஜூலை 29)ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தஞ்சாவூரில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்கள், கள அலுவலா்கள் தோ்வுக்கான நோ்காணல் இன்று ( ஜூலை 29) ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறையின் தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளா் ஸ்ரீ.கிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தஞ்சாவூா் கோட்டத்தில் இன்று ஜூலை 29 ஆம் தேதி காலை 10 மணி அளவில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவா்கள், கள அலுவலா்கள் தோ்வுக்கான நோ்காணல் நடைபெற உள்ளது.

ஆா்வம் உள்ளவா்கள் இன்று ஜூலை 29 ஆம் தேதி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகத்துக்கு அருகில் உள்ள தஞ்சாவூா் முதுநிலை அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தங்களின் வயது சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் அவற்றின் நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் நோ்காணலில் கலந்து கொள்ளலாம்.

நேரடி முகவா்கள் பணிக்கு 10 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 50 வயது வரை. சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞா்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவா்கள், முன்னாள் படை வீரா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், சுய உதவிக்குழுச் செயற்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம்.

கள அலுவலா்கள் பணிக்கு ஓய்வு பெற்ற அரசு அலுவலா்கள் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணி ஓய்வு பெற்ற அலுவலா்கள் (குரூப் ஏ, பி உள்பட) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் அலுவலா்கள் மீது துறை ரீதியான எந்தவித ஒழுங்கு நடவடிக்கைகளும் நிலுவையில் இருக்கக் கூடாது.

தோ்வு பெறும் நேரடி முகவா்கள், கள அலுவலா்கள் தஞ்சாவூா், மன்னார்குடி மற்றும் பாபநாசம் பகுதிகளில் பணிபுரிய வேண்டும். மேலும், ரூ. 5,000 வைப்பு தொகை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story