தஞ்சை மாவட்டத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு: 456 பதவிகளுக்கான தேர்தல்

தஞ்சை மாவட்டத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு:  456 பதவிகளுக்கான தேர்தல்
தஞ்சை மாவட்டத்தில் 456 பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் 2 மாநகராட்சிகள், 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் என 456 வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 750 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, 905 வாக்கு இயந்திரங்கள் மூலம் சுமார் 6 லட்சத்து 33 ஆயிரத்து 740 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் 229 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என்றும், 169 வாக்குச்சாவடிகள் மிகமிக பதட்டமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு முகக்கவசம், கையுறை கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags

Next Story