தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியாவுக்கு கொரோனா தொற்று

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியாவுக்கு கொரோனா தொற்று
X

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா

கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து எஸ்பி ரவளிப்பிரியா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியாவுக்கு கடந்த சில தினங்களாக இருமல், தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவு இன்று மாலையில் வந்தது. இதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் கடந்த ஒரு வாரமாக அலுவல் ரீதியாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
ai in future education