தஞ்சை மாநகராட்சயில் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் பணி தீவிரம்

தஞ்சை மாநகராட்சயில் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் பணி தீவிரம்
X

தஞ்சாவூர் மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தஞ்சை மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாநகராட்சி உட்பட்ட 52 வார்டுகளில் கொரேனா தடுப்பு பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சிறப்பு முகாம் நடத்தி அப்பகுதி மக்களுக்கு உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் வீடுகளில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இன்று வடக்குவாசல், கரந்தை, கீழவாசல் ஆகிய பகுதிகளில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai marketing future