தஞ்சாவூரில் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரம்
X
By - Aaruthran, Reporter |19 May 2021 8:30 AM IST
தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் 280 படுக்கைகள் தயார் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஆக்ஸிஜன் படுக்கைகளின் தேவைகள் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 1,250 ஆக்சிசன் படுக்கைகள் முழுவதும் நிரம்பி விட்டதால், தொற்று பாதித்தவர்கள் ஆக்ஸிஜன் படுக்கைக்காக சுமார் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரிக்கும் வகையில் தஞ்சை இராசமிராசுதார் மருத்துவமனை 280 ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆக்ஸிஜன் குழாய் பதிக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu